85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ்: உலகம் முழுவதும் ஏற்படும் பெரும் தாக்கம்
டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் 30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
ஆல்ஃபா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதில் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோய் பரவல் தன்மை கொண்டதாக உள்ளது.
மேலும், டெல்டா வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதே வேகம் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இந்த வகை வைரஸ் சுமார் 85 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளது.