வழுக்கை தலையிலும் கொத்தாக முடி வளரணுமா? கருவேப்பில்லை எண்ணெயில் இத சேருங்க
முடி என்பது பெண்களுக்கான ஒரு அழகுக் கிரீடமாகவே பார்க்கப்படுகிறது. இன்று பலர் வேகமான விளைவுகளுக்காக ரசாயன பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இன்னும் பலர் இயற்கையின் மகிமையை நம்புகிறார்கள்.
அத்தகைய இயற்கை விரும்பிகளுக்காக, கறிவேப்பிலை ஒரு பொக்கிஷம். எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல், நம் பாட்டிமார்களும் தாய்மார்களும் இதைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது வெறும் சமையலில் மற்றும் முடி மற்றும் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வைத்து சில பொருட்களை சேர்த்து எண்ணை செய்து முடிக்கு போட்டால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
முடி வளர்ச்சிக்கு
முதலில் 1 கப் தேங்காய் எண்ணெய் 1/4 கப் கழுவி உலர்ந்த கறிவேப்பிலை 1/4 கப் புதிய நெல்லிக்காய், சிறிய துண்டுகளாக நறுக்கியது 1 டீஸ்பூன் வெந்தய விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகளை ஒரு தடிமனான அடிப் பகுதியில் கொண்ட பாத்திரத்தில் சேர்த்து, குறைந்த தீயில் மெதுவாக காய்ச்சி, உள்ளிருக்கும் ஈரப்பதம் முழுவதும் ஆவியாகும் வரை கொதிக்க விடுங்கள்.
ஈரப்பதம் நீங்கிய பின்பு, நெல்லிக்காயும் மற்ற மூலிகைகளும் பாத்திரத்தின் அடியில் பழுப்பு நிறமாக ஆகும். இதே தருணத்தில் அடுப்பை அணைத்து, அந்த மூலிகைகள் எண்ணெயில் ஒரு நாள் ஊறவிடுங்கள்.
அடுத்த நாள், எண்ணெயை நன்கு வடிகட்டி ஒரு சுத்தமான கண்ணாடி போத்தலில் ஊற்றி பாதுகாத்து வையுங்கள். இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தலைமுடியில் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பஞ்சம் இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |