இப்படி ஒரு சுவையில் தயிர் வடை சாப்பிட்டதுண்டா? செய்வது எப்படி?
வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். அந்த வடையை சாம்பார் அல்லது தயிரில் போட்டு சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று.
அப்படி, வடையின் காரசாரமும் தயிரின் புளிப்பும் சேர்த்து சுவையாக எப்படி தயிர் வடை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1 tbsp
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - போதுமான அளவு
தயிர் - 2 கப்
துருவிய தேங்காய் - 2 tbsp
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் தேவைக்கு
தாளிக்க
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை - சிறிதளவு
மேலே தூவ
சீவிய தேங்காய் காரா பூந்தி கொத்தமல்லி
செய்முறை விளக்கம்
முதலில் அரசி, உளுந்தை ஊறவைத்து அரைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக, தயிரை நன்கு அடித்துகொண்டு அதில் தேங்காய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.
அதன்பின்னர், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து கொட்டி கொள்ளுங்கள்.
பின்னர், வடைக்கு அரைத்த மாவை வடையாக சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின் அவற்றை ஒரு பவுல் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து தயிரில் போடுங்கள்.
தயிரில் வடைகள் மூழ்கியதும் தூவ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தூவி பரிமாறினால் சுவையான தயிர் வடை ரெடி!