ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தயிர்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
மலச்சிக்கல் என்பதை தினசரி மலம் கழிக்க முடியாமல் இருப்பது மற்றும் மலத்தை வெளியேற்ற கஷ்டப்டப்படும் நிலையை குறிக்கும்.
சில நேரங்களில் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான நிலைகளில் ஒன்றாக இருந்தாலும் வலி மற்றும் அசௌகரியம் தவிர, மக்களுக்கு ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறது.
வாழ்க்கை முறை பழக்கங்கள் முதல் உணவு முறை மாற்றங்கள் வரை தொந்தரவுக்கு உள்ளாகும் குடல் இயக்கங்கள் பல்வேறு காரணிகளிலிருந்து உருவாகின்றன. மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன.
ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பின்மை, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, சில மருந்துகளின் பக்க விளைவுகள், அடிப்படை சுகாதார சிக்கல் , நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
ஒற்றை புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சினை! ஐஸ்வர்யாவிற்கு அடங்கி செல்லும் தனுஷ்
முக்கிய குறிப்பு:
தயிர் சுவையானது, இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இது மேலும் மனம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் நிர்வகிக்கிறது.
இது இயற்கையில் உறிஞ்சக்கூடியது மற்றும் ஜீரணிக்க கடினமானது. இது “மலச்சிக்கலுக்கு பொருந்தாது.” எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குணமாகும் வரை தயிரை தவிர்க்கவும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?
பால் பெருக்கி இலையை வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
நில ஆவாரை இலையைத் துவையலாக அரைத்து, இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை படிப்படியாகக் குறையும்.
கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொறித்த பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு இடித்து, சூரணம் செய்து, சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கேன்ஸ் பட விழாவில் நிர்வாணமாக ஓடி வந்த பெண்! அதிர்ச்சியில் பிரபலங்கள்