ஆழ் கடலுக்குள் கிரிக்கெட் விளையாடி CSK அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நீச்சல் வீரர்கள்! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வென்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை கௌரவிக்கும் விதமாக நள்ளிரவில் ஆழ்கடலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையிலான குழுவினர் ஆழ்கடலின் மணலில் ஸ்டம்ப் அடித்து கிரிக்கெட் விளையாடி தங்களின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவில் நடுக்கடலில் மின் ஒளியில் கிரிக்கெட் விளையாடியது கிரிக்கெட் ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதேவேளை, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையிலான குழுவினரும் வித்தியாசமாக தங்களின் வாழ்த்துக்களை கூறி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.