திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள்
கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்து குட்டியை ஈன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரியா மாகாணத்துக்கு அருகே உள்ள போர்ட்லேண்டில் ஜெசா லாஸ் (Jessa Laws), பென் லாஸ் (Ben Laws) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்றது.
மணப்பெண்ணான ஜெசா லாஸூக்கு சொந்தமான பண்ணையில் இந்த மணவிழா நடைபெற்றது. கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்தது.
கர்ப்பமாக இருந்த அந்த பசு கூட்டத்தினர் முன்னிலையிலேயே கன்றையும் ஈன்றது. பண்ணையில் வெட்டவெளியில் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அனைவரும் பசு கன்று ஈன்பதை பார்த்து பரவசமடைந்தனர்.
மேலும், 1200 டாலர் மதிப்புள்ள வெள்ளை நிற உடையில் இருந்த மணப்பெண், சேற்றில் இருந்த கன்றுக்குட்டியை தூக்கியதால், திருமண உடை அழுக்காக இருந்தது. அதே உடையில் திருமணத்தில் கலந்து கொண்ட அவர், தனது பண்ணையில் உருவான பாலில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.