அந்தரத்தில் அமர்ந்திருந்த மணமக்கள்: பின்பு நடந்த அசம்பாவிதம்! பேரதிர்ச்சியில் உறவினர்கள்
திருமணத்திற்கு தயாரான மணமக்களை ஜே.சி.பி இயந்திரத்தில் அமரவைத்து உறவினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், குறித்த வாகனத்தின் சாரதி செயலால் மணமக்கள் கீழே விழுந்து மண்ணைக் கவ்வியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சி நடைபெற்ற இடம் எதுவும் தெரியாத நிலையில், மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற திருமண கொண்டாட்டம் தற்போது மருத்துமனையில் படுக்கும் நிலையில் அமைந்துள்ளது கொடுமையாக உள்ளது.
கீழே இருந்த உறவினர்கள் ரசித்து அவதானித்துக் கொண்டிருந்த தருணத்தில் சாரதி தனது பழக்க தோஷத்தில் வண்டியில் இருந்த பக்கெட்டை கீழே கவிழ்த்து விட மணமக்கள் பொத்தென விழுந்ததுடன், முதுகு பகுதியில் பலத்த அடியும் பட்டுள்ளது.