கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
கொரோனாவின் இரண்டாவது அலை ஒட்டுமொத்த உலகையும் பயங்கரமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. குறித்த பாதிப்பில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை தற்போது இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சின்ன, சின்ன காய்ச்சல், இருமல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
85 சதவீத மக்களுக்கு காய்ச்சல், சளி போன்று கொரோனா தொற்று வந்து விட்டு சென்று இருக்கும். மீதமுள்ள 15 சதவீதம் பேருக்குத்தான் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே சிறிய காய்ச்சல் வந்தவுடன் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
பலர் போலீசுக்கு பயந்துதான் முகக்கவசம் அணிகிறார்கள். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்தாலே இந்த நோயை கட்டுப்படுத்தலாம். அதேபோல தடுப்பூசி போட்டவர்களில் நிறைய பேருக்கு கொரோனா வரவில்லை.
அதையும் மீறி வந்தாலும் அவர்கள் இறக்கவில்லை. எனவே தடுப்பூசியை கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனா 2-வது அலையில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்தவர்.