இறந்ததாக கூறப்பட்ட கொரோனா நோயாளி... சடலத்தை பார்த்த உறவினருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா தொற்றினால் நபர் இறந்துவிட்டதாக கூறி வேறொருவரின் உடலைக் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகிகள் வேறொருவரின் சடலத்தினைக் கொடுத்துள்ளனர்.
கன்னு குமாரின் உறவினர்கள் இதனை அவதானித்து, பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதுகுறித்து மாவட்ட நீதிபதி, அரசு மருத்துவ நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில் குறித்த தவறுக்கு காரணமானவர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளதோடு, மீண்டும் இம்மாதிரியான தவறுகள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ளவும் கூறியுள்ளார்.