வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட சடலம்... கதறிதுடிக்கும் உறவினர்கள்! இந்தியாவின் கொரோனா அவலநிலை
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது இரண்டாவது அலையை மிகத் தீவிரமாக பரப்பி வருகின்றது.
மற்ற நாடுகளை விட இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. மருந்து மற்றும் ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் மக்கள் படும் அவஸ்தை காணொளியாக வெளிவந்து கண்கலங்க வைக்கின்றது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனாவினால் உயிரிழந்தவரின் சடலத்தினை குடும்பத்தினர் கண்ணீர் மல்க தனது வீட்டின் முன்பே இறுதிச்சடங்கு நடத்தி எரித்துள்ள காட்சி மேலும் உறைய வைத்துள்ளது.
குறித்த காட்சியில் இறந்தவரின் தாய் மிகவும் வயதானவர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பு உடை அணிந்தும், மனைவி மற்றும் மகள் மாஸ்க் அணிந்தும் இறந்தவரின் முகத்தினை அவதானித்துள்ளனர். இறுதியில் அவரது மகன் இறுதிக்காரியத்தினை செய்துள்ளார். இக்காட்சி இந்தியாவின் நிலையினை மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...