இந்த பிரச்சினைகள் உடலில் இருந்தால் கொரோனா எளிதில் தாக்குமாம்! என்னென்ன?
கொரோனா வைரஸ் ஆனது தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதே காரணம்.
இது பலருக்கும் தெரியாத உண்மை. இதனால் உடலில் சர்க்கரை அளவே கட்டுக்குள் வைத்திருந்தால் வைரஸ் வேகமாக வளருவதை தடுத்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும், உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை வைரஸ் எளிதில் தாக்கும்.
அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியான சதவீத வீட்டு உணவு முறையை கடைப்பிடித்தால் உடல் எடையை குறைத்து விடலாம்.
இதற்காக வேறு முயற்சிகள் செய்ய தேவை இல்லை. சர்க்கரை நோயாளிகள் சரியான சதவீத வீட்டு உணவை எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
பின்னர், அதிக எடை உள்ளவர்கள் எடையை குறைக்க மிக வேகமாக ஓடினால் மூட்டு தேய்மானம், இருதய பாதிப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வைரஸை ஒழிக்க அரசின் விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
