நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் கொத்தமல்லி பொடி தயாரிப்பது எப்படி?
கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும் சக்தி இதில் உள்ளது.
இது இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இன்று கொத்தமல்லி பொடி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி - 2 கட்டு
- பெருங்காயம் - 1 துண்டு
- கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 10
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- புளி - சிறிதளவு
செய்முறை
புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.
அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.
சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி.
