கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பெரும்பாலான அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிக்கனை பல்வேறு வகைகளிலும் சுவையாக சமைக்க முடியும். இது அந்த உணவுடனும் பக்காவாக பொருந்துவது தான் சிக்கனின் சிறப்பம்சம்.
அந்தவைகயில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக எவ்வாறு கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
சிக்கன் - 500 கிராம்
உப்பு - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
வதக்கி அரைப்பதற்கு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
மிளகு - 1/2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 3 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 1 கையளவு
உப்பு - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2-3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி
புளிச்சாறு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிக்கனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி குறைந்தது 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, மிளகு, கடுகு, சீரகம் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அதில் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரையில், நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின்னர் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரதை்தை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில், ஊறவைத்துள்ள சிக்கனையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில், சிக்கனை நன்றாக வேக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மிதமான தீயில் வைத்து, 15 நிமிடங்கள் வரையில் பாாத்திரத்தை மூடி வேகவிட வேண்டும்.

அதன் பின்னர் சிக்கனை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு, அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறிவிட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கூர்க் பாணியில் சிக்கன் மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |