ப்ளிஸ் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க.. கையெழுத்து கூம்பிடும் கூல் சுரேஷ்!
ப்ளிஸ் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க என நடிகர் கூல் சுரேஷ் பேசிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கூல் சுரேஷ்
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கூல் சுரேஷ்.
இதனை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விமர்சனங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில், புதிய திரைப்படங்கள் வெளியாகி விட்டால் படத்திற்கு சென்று படம் எப்படி இருக்கின்றது. அதில் வரும் ஹீரோக்களை புகழ்ந்தும் தள்ளுவார்.
கூல் சுரேஷின் பட விமர்சனத்தை பார்த்து திரைப்படம் பார்க்க போகும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்கும் காணொளி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை மரியாதை செலுத்தும் வகையில் அவர் அனுமதியின்றி அவரின் கழுத்தில் மாலை போட்டுள்ளார்.
மேலும் கூல் சுரேஷின் இந்த நடவடிக்கை நமது கலாச்சாரத்திற்கு புறம்பாக இருந்த காரணத்தினால் இந்த விடயத்தை அங்கிருந்தவர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கூல் சுரேஷ் தற்போது ஒரு வீடியோக்காட்சி வெளியிட்டுள்ளார். அதில் ,“ தயவு செய்து என்னை மன்னிக்கவும். எனக்கு யாராவது உதவி செய்யுங்கள்.. நா அவ்வளவு வசதியானவன் அல்ல.
சாதாரண குடும்பம் தான். இனி அப்படி நடந்து கொள்ள மாட்டேன்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் ரசிகர்கள், “ நம்முடைய பப்ளீசிட்டிக்காக பெண்களை அவதிப்பது தவறு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் . |
