குக்வித் கோமாளி 3; சர்ச்சையில் சிக்கிய கோமாளி.. வெங்கடேஷ் பட் கொடுத்த விளக்கம்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இந்த புதிய சீசனில், பெரும்பாலான பழைய கோமாளிகளே இந்த சீசனிலும் இடம்பெற்றுள்ள நிலையி புகழ் மட்டும் மிஸ்ஸிங். அவருக்கு பதில் சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
முதல் எபிசோடு என்பதால் கோமாளிகளின் அறிமுகம் நடந்தது. இந்நிலையில், பரத், செஃப் வெங்கடேஷ் பட்டை கலாய்க்க செஃப் வெங்கடேஷிடம் அடி வாங்கியது போல பரத்தும் அடி வாங்கினார்.
இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பரத்தை செஃப் அடித்தது மிகவும் மோசமாக இருந்ததாக பலரும் கூறி வருகிறார்கள். இதுகுறித்து விளக்கமளித்த வெங்கடேஷ் பட் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள் என்றும், உண்மையில் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் அடிக்கவில்லை, செட்டில் நடப்பவை எல்லாமே வெறும் ஃபன் மட்டுமே.
மேலும், நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம்.
நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.