தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு இப்படியொரு மாற்றம் கிடைக்கும்! அதுவும் காலையில் குடித்தால்
பொதுவாகவே ஒரு சிலருக்கு தேங்காய் தண்ணீர் என்றால் கொள்ளைப்பிரியம். அதற்காக சில வீடுகளில் பெரிய சண்டையே வந்து விடும்.
ஆனால் அதில் இருக்கும் நற்பயன்களை அறியாமல் வெறும் சுவைக்காக மட்டுமே குடிப்பார்கள். உண்மையில் தேங்காய் தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதென்று எற்றாவது யோசித்ததுண்டா?
தேங்காய் தண்ணீரின் நன்மைகள்
தேங்காய் தண்ணீரில் நம் உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளை கொண்டிருக்கின்றது. தினமும் தேங்காய் தண்ணீர் அருந்துவதால்
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- இரத்த அழுத்தம் அதிகரிக்காது
- உடலுக்கு கொழுப்பு சேராது
- சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்
- சிறுநீரக கற்களை வேரோடு இல்லாமல் போக்கும்
- செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்
- வாயு தொல்லை நீங்கும்
- ஈறுகள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும்
- பக்ரீரியாக்கள், வைரஸ்களை அழித்து நமது உடலை பாதுகாக்கும்
- தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் சுரப்பியை செயல்பட வைக்கும்.
- உடலின் வறட்சி பிரச்சனை சரி செய்யப்பட்டு, நீர்சத்து அதிகரிக்கப்படும்
- உடலிற்கு பொலிவான தோற்றத்தையும், உடல் ஆற்றலையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதன் மூலம் பெறலாம்
தவிர்க்க வேண்டியது
சிலருக்கு தேங்காய் தண்ணீர் குடித்தால் சளி பிடிக்கும் அப்படியானவர்கள் தேங்காய் தண்ணீரை மதிய வேளையில் குடிக்கலாம்.
தேங்காய் நீர் என்பதை அளவோடு குடிப்பதே நல்லது. 3-4 தேங்காயை உடைத்து ஒரேநாளில் குடிப்பது உங்களின் உடலுக்கு பாதிப்பைத் தரும்.