ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா?
உலகின் ஆபத்தான உயிரினங்களில் முக்கியமானவை பாம்புகள் தான்.
இவை பார்ப்பதற்கு சாந்தமாக இருந்தாலும், விஷத்தன்மை வாய்ந்த இந்த உயிரினங்களாகும்.
இந்திய கலாச்சாரத்தின்படி, பாம்புகள் இறைவனுக்கு இணையாக வழிபாடு செய்யப்படுகிறது. இந்த உயிரினங்களை அடிக்கவோ கொல்லவோ கூடாது என்றும் கூறுவார்கள். இன்னும் சிலர் பாம்புகளை தீமையின் சின்னமாகவும் பார்க்கிறார்கள்.
விஷ பாம்புகள் கடவுளின் அம்சமாக வழிபட்டாலும் இவை தனக்கு தேவையான இரையை பிடிக்கும் பொழுது எந்தவித கருணையையும் காட்டுவதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் நாஜநாகங்கள் அதிகமாக வாழும் நகரம் ஒன்று இருப்பதாகவும், அங்கு அவைகளின் ராஜ்யம் தான் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், ராஜநாகங்கள் நிறைந்த ஆபத்தான இடம் பற்றி பதிவில் பார்க்கலாம்.
ராஜநாகங்கள் அதிகம் வாழும் நகரம்
கடல் மட்டத்திலிருந்து சுமாராக 2,700 அடி உயரத்தில் 3 சதுர கி.மீ பரப்பளவை கொண்ட சிறிய கிராமம் தான் அகும்பே கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வானிலையின்படி, அதிகமாக மழை பெய்வதற்கு "தெற்கின் சிரபுஞ்சி" தான் காரணம் என்கிறார்கள்.
600 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் அடர்ந்த மழைக்காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான மலைகள் உள்ளன. இயற்கை காட்சியை விரும்புவர்களுக்கு இதுவொரு சொர்க்கம் என்கிறார்கள்.
மேலும், அகும்பே கிராமத்தில் Meliola agumbensis, Tarenna agumbensis, Hygromaster agumbensis மற்றும் Dactylaria agumbensis போன்ற தனித்துவமான மற்றும் அரிதான பூஞ்சைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் கிராமத்திற்கு அகும்பே என பெயர் வந்துள்ளது.
ராஜநாகங்கள் அதிகமாக இருக்க காரணம்
அகும்பே கிராமத்தில் ராஜநாகங்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்த கிராமத்தில் பிரபல பாம்புகள் ஆராச்சியாளர் பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர், அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தை (ARRS)இங்கு அமைத்துள்ளார். இந்தியாவில் முதல் ராஜநாகங்கள் பற்றிய ரேடியோ டெலிமெட்ரி திட்டம் இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹெர்பெட்டாலஜிஸ்ட்கள் மூலம உயிரினங்களை தொந்தரவு செய்யாமல் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை கவனிக்கிறார்கள். நடத்தை, உடலியல், மரபியல் மற்றும் பரிணாம வளர்ச்சியை கவனித்து அந்த இனம் அழிந்து போகாமல் தடுப்பதை நோக்கமாகும்.
உலகின் மிக நீளமான விஷப் பாம்பான ராஜ நாகம், சுற்றுச்சூழல் சமநிலை பராமரிப்பதில் முக்கியம் பெறுகின்றது. இதனை ராஜநாகம் போன்ற வேட்டையாடுபவர்கள் இல்லையென்றால் மற்ற விஷ பாம்புகளின் இனம் வேகமாக வளர ஆரம்பிக்கும். அத்துடன் நோய்கள் பரவுவது குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |