நெருப்பை கக்கும் விசித்திர மனிதர்: அவர் செய்யும் தந்திரம் தான் என்ன? வாயடைக்க வைத்த காட்சி
குங்பூ கலைஞர் ஒருவர் தனது தந்தரத்தினால் வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
லியூ ஃபே(55) என்ற குங்பூ மாஸ்டர் தெருக்களில் குங்பூ செய்துவருவதுடன் சில வித்தைகளையும் செய்து மக்களின் கவனத்தினை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆம் மரத்தூளை தனது வாயில் அடைத்து அதில் துளையிட்டு, தனது மூச்சை உள்ளிழுத்தும், வெளிவிட்டும் ஏதேதோ குங்ஃபூ பயிற்சிகள் செய்ய, சிறிது நேரத்தில் உள்ளே நெருப்பு பற்றி அந்தத் துளை வழியாக புகை வெளியேறுகிறது.
லியூவின் வாயிலிருந்து வரும் அதிசய நெருப்பைப் பயன்படுத்தி நபர் ஒருவர் சிகரெட்டையும் பற்ற வைத்துள்ளார். மரத்தூளில் உள்ள பாஸ்பரஸை எரியவைப்பதாக 'டிராகன் மனிதர்’ லியூ கூறியுள்ளார்.
லியூ மரத்தூளை வாயில் வைக்கும்போதே சில பொருட்களுடன் இணைந்து நெருப்பை உருவாக்கும் சில வேதிப்பொருட்களைச் செருகியிருக்கலாம் என்பது உள்ளிட்ட காரணங்கள் கூறி பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.