பழவண்டியில் இருந்த கைக்குழந்தை! தள்ள முடியாமல் சிரமப்பட்ட பெண்! ஹீரோவாக மாறிய குழந்தைகள்
கைக்குழந்தை ஒன்றினை பழம் விற்கும் தள்ளுவண்டியில் படுக்க வைத்துவிட்டு, வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பெண் அந்த வண்டியை தள்ளுவதற்கு சிரமப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் சென்று உதவி செய்துள்ளது கண்கலங்க வைத்துள்ளது.
குறித்த காட்சியில் பழ வண்டி தள்ளிவரும் பெண்மணி ஒருவர், சற்றே மேடான பகுதியில் தமது பழவண்டியை தள்ள முடியாமல் தவித்து வருகிறார். அப்போது அந்த வழியில் 2 குழந்தைகள் நடந்து வருகின்றனர்.
அந்த குழந்தைகளுக்கு முன்பே அந்த வழியாக வந்த பலரும் அந்த பெண்மணியை தாண்டி வருகின்றனர். அவர்களுள் சிலர் அந்த பெண்மணி பழவண்டியை தள்ள முடியாமல் சிரமப்படுவதை உணருகின்றனர். ஆனால் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.
அப்போது அவ்வழியே வந்த பால் மனம் மாறாத குழந்தைகள் குறித்த பெண்ணிற்கு உதவி செய்து வண்டியை மேடான பகுதியில் நிறுத்துவதற்கு உதவி செய்துள்ளனர்.
இதனால் நெகிழ்ந்த அந்த பெண்மணியோ, தக்க தருணத்தில் தனக்கு உதவிய அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்து அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்த நினைத்து, தம் வண்டியில் இருந்த வாழைப்பழத்தை அவர்களுக்கு உபசரிக்கிறார்.
குறித்த பழ வண்டியில் கைக்குழந்தை ஒன்றும் இருந்துள்ள நிலையில், குழந்தைகள் உதவி செய்து அசத்தியுள்ளனர். ஆனால் இதனை அவதானித்த பெரியவர்களோ எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளது வேதனையை அளிக்கின்றது.
இக்காட்சி எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில், தற்போது வைரலாகி வருகின்றது.
आपकी डिग्री सिर्फ़ एक काग़ज़ का टुकड़ा है, अगर वो आपके व्यवहार में ना दिखे तो। pic.twitter.com/eHsuTYOGrh
— Mahant Adityanath 2.0🦁 (@MahantYogiG) August 8, 2022