பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமி: பெற்றோரிடம் வந்து கதறிய கொடுமை
பக்கத்து வீட்டில் டிவி பார்க்க சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தின் கிஷ்னி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 11 வயதான சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டில் டிவி இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சிறுமி செல்லும் போதெல்லாம் அங்கிருந்த வாலிபர் ஆசையாக பேசி வந்துள்ளார்.
இதே போன்று கடந்த செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் டிவி பார்க்க சென்ற சிறுமியை குறித்த வாலிபர், வீட்டில் யாரும் இல்லாததால் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
ஆனால் சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் வழக்கு பதிவு செய்து குறித்த வாலிபரை வலை வேசி தேடி வரும் நிலையில், சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.