சிக்கனுடன் குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்? பரிதாபமான பறிபோன 2 உயிர்! எச்சரிக்கை பதிவு
சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு பின்பு வயிறு எரிச்சல் இருந்ததால் குளிர்பானம் வாங்கி குடித்த தாய் மற்றும் மகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
இந்திய மாநிலம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு கற்பகவல்லி(34) என்ற மனைவியும் சண்முகபாண்டி(8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் இருக்கின்றனர்.
நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் கடையில் வாங்கிவந்த சிக்கன் கிரோவியுடன், வீட்டில் வைத்திருந்த உணவினை சாப்பிட்டுள்ளார்.
அப்பொழுது லேசான வயிர் எரிச்சல் இருந்ததால், அருகில் இருந்த பெட்டிக்கடையில் 10ரூபாய் குளிர்பானம் வாங்கி மகளுக்கும் கொடுத்தும் தானும் அருந்தியுள்ளார்.
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால், உறவினர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூறாய்வுக்கு பின்னர் கிரேவி சாப்பிட்டதால் உயிரிழந்தனரா அல்லது இறப்புக்கு குளிர்பானம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அசைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் அது செரிமானம் ஆவதற்கு குளிர்பானம் எடுக்கும் பழக்கத்தினை வைத்துள்ளனர். குறித்த பழக்கம் உயிருக்கே உலைவைக்கும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.