sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியவில் மட்டன் நிச்சயம் மட்டன் முக்கிய இடம்தை பிடித்து விடும்.
இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பை வாரநாட்களில் அதிக வேலைபளுவால் ருசியாகவும் ஆறுதலாகவும் செய்ய முடியாத நிலை காணப்படும்.
இந்த ஞாயிற்று கிழமையில் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் வேக வைப்பதற்கு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மட்டன் - 1/2 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூய் - 1 தே.கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
மசாலா அரைப்பதற்கு
மல்லி - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1தே.கரண்டி
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 3
வரமிளகாய் - 2
கிரேவிக்கு தேவையானவை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
சோம்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 2 முறை கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கழுவி வைத்துள்ள மட்டனையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, மட்டனை கிளறிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் வரையில் வேகவைத்து இறக்கிவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரையில் நன்கு வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கி, தக்காளி மென்மையாகும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னரர் வேக வைத்துள்ள மட்டனையும் நீருடன் அப்படியே சேர்த்து கிளற மூடி வைத்து, 10 நிமிடங்கள் வரையில் வேக வைத்து, இறுதியில் கொத்தமல்லியைத் தூவி, இறக்கினால் அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
