சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் என்ன நோய் தெரியுமா? அலட்சியம் வேண்டாம்
சிறுநீரின் நிறம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய பல தகவல்களை உணர்த்தும். எனவே சிறுநீர் எந்தெந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து என்று பார்க்கலாம்.
சிவப்பு நிறம்
சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம். இவை சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருக்கலாம்.
சிறுநீர் கழிக்கும் போது வலி இல்லாமல், சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தால், அது மேலும் கவலைக்குரிய விஷயம். அவை புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.
அடர் மஞ்சள்
சிறுநீரின் நிறம் அதிக கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ இருந்தால் அதுவும் நோயின் அறிகுறியாகும்.
குறிப்பாக மலத்தின் நிறமும் மாறியிருந்தால் கடுமையான கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.
கண்டுப்பிடிப்பது எப்படி?
உடலில் திரவம் எவ்வளவு அதிகமாக செல்கிறதோ, அவ்வளவு அதிகமாக சிறுநீரில் மஞ்சள் நிறமியை நீர்த்துப்போகச் செய்யும்.
அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் தெளிவாகும். குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறத்துடன் சேர்ந்து கெட்டியாக மாறும். எனவே, சிறுநீரின் நிறம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களை பொறுத்தது.
பீட்ரூட், ஜாமூன் அல்லது சில மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரின் நிறம் பச்சை, மஞ்சள், நீலம் போன்றவையாக இருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் சிறுநீரின் நிறம் மாறும்போது ஏதாவது ஒரு நோய் வரும் அபாயம் உள்ளது.
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரகத்தில் கல் இருந்தாலோ, சிறுநீரின் நிறம் ரத்தத்தின் நிறம் போல் இருக்கும்.
பொதுவாக, சிறுநீர் கழிக்கும் போது வலி இருக்கும், ஆனால் வலி இல்லாமல் சிறுநீரின் நிறம் இரத்தமாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாகும்.
இது போன்ற சூழ்நிலைகளில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அனுகுவது அவசியம்.