பிறப்பு முதல் இறப்பு வரை வறுமையில் வாடும் நபர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சாணக்கிய நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், காலம் முழுவதும் ஏழையாகவே வாழப்போகும் நபர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பண வரவை குறைக்கும் பழக்கங்கள்
1. சாணக்கிய நீதி படி, எப்போதும் சண்டை சச்சரவு இருக்கும் வீடுகளில் லட்சுமி தேவியின் வரவு இருக்காது. இதனால் இவர்கள் வீட்டில் பணவரவு குறைவாகவே இருக்கும். சண்டையில்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும் வீடுகிளல் தான் லட்சுமியின் வரவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
2. நாம் இருக்கும் இடம் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதே போன்று நாம் அணியும் ஆடைகள் கூட சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் லட்சுமியின் வரவு அதிகமாக இருக்கும். வறுமையை ஒழிக்க நினைப்பவர்கள் சுத்தமாக இருந்து பழக வேண்டும்.
3. அதிகமாக உண்பவர்கள் வீட்டில் லட்சுமி இருக்காது என சாணக்கியர் கூறுகிறார். சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கினால் வீட்டில் லட்சுமி வரவு குறையும். இப்படியான மோசமான பழக்கங்கள் இல்லாத வீடுகளில் பணம் நிறைந்திருக்கும். நிதி சிக்கல்கள் அதிகமாக இருந்தால் சோம்பேறித்தனமாக உள்ளீர்கள் என்று அர்த்தமாகும்.
4. இரவு நேரங்களில் சமையலை முடித்த பின்னர் பாத்திரங்களை அப்படியே வைத்து விட்டு படுக்கைக்கு செல்லாமல், அனைத்தையும் சுத்தப்படுத்திய பின்னர் படுக்கைக்கு செல்ல வேண்டும். ஏனெனின் இரவு வேளைகளில் அப்படியே பாத்திரங்கள் இருக்கும் பொழுது அன்னபூரணி தேவிக்கு கோபம் வரும் என சாணக்கியர் கூறுகிறார்.
5. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை துடைப்பது லட்சுமியை இல்லாமலாக்குவதற்கு சமம். பகலில் மட்டுமே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த நாள் காலையில் சுத்தம் செய்யலாம். சில வீடுகளில் இரவு வேளைகளில் தான் அனைத்து வேலைகளும் நடக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |