இந்த 4 நபர்களுடன் சண்டையிடால் வாழ்வில் நிம்மதியே இருக்காது! எச்சரிக்கும் சாணக்கிய நீதி
பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' நூலில் வெற்றிகரமான வாழ்க்கை, செல்வ மேலாண்மை மற்றும் நல்ல வாழ்க்கை நெறிகள் குறித்து பல அரிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவற்றில், கோபம் மனிதனை எவ்வாறு தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் அவர் எச்சரிக்கிறார். மேலும், அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் நான்கு வகையான மனிதர்களுடன் சண்டையிடவோ, தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.

அப்படி அவர் குறிப்பிட்ட அந்த நான்கு வகை மனிதர்கள் யார்? ஏன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படுவதால் நமக்கு என்ன இழப்பு ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குடும்ப உறுப்பினர்கள்

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதி நூலில், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாழ்க்கையில் நாம் கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் போதும், நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களிலும் முதலில் நமக்காக நிற்பவர்கள் நமது குடும்பத்தினரே.
எனவே, நம்மை நேசிக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வாழ்வில் மகிழ்ச்சியை அடைய முடியாது. அன்பும், புரிதலும் நிறைந்த உறவுகளே நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையாகும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

ஆசிரியர்
மற்றும் குரு நமது வாழ்க்கையில் ஆசிரியர் மற்றும் குருவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு குரு நம்மை அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானம் என்னும் ஒளிக்கு அழைத்துச் செல்கிறார்.
நமது திறமைகளையும், நல்ல பண்புகளையும் வளர்க்க வழிகாட்டுபவர் குரு. அதனால் எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதையோ அல்லது அவர்களை அவமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது
அறிவையும், சிந்திக்கும் திறனையும் பயன்படுத்தாமல் செயல்படுபவர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அத்தகையவர்களுடன் வாதிடுவது நமது நேரத்தையும் மன சக்தியையும் வீணாக்கும். அவர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வதே சிறந்த அணுகுமுறையாகும்.

நண்பர்களுடன் சண்டையைத் தவிர்க்க வேண்டும்
நண்பர்கள் நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர்கள். நாம் சிரமத்தில் இருக்கும் போது நமக்கு ஆதரவாக நிற்பவர்கள் உண்மையான நண்பர்களே. எனவே, நண்பர்களுடன் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல், அவர்களின் குறைகளை மன்னித்து உறவை பாதுகாக்க வேண்டும். ஒரு நல்ல நண்பரை இழப்பது என்பது, நம்மை நம்பிக்கையுடன் துணை நிற்கும் ஒருவரை இழப்பதற்கு சமம் என்று சாணக்கியர் எச்சரிக்கின்றார். இந்த நபர்களை பகைத்துக்கொண்டு ஒருவன் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |