சாணக்கிய நீதி - இந்த இடத்தில் உங்கள் பணத்தை கொடுங்க... செல்வம் குறையாது
சாணக்கிய நீதிப்படி குறிப்பிட சில விடயங்களுக்கு நாம் நமது பணத்தை செலவு செய்தால் நமக்கு செல்வத்திற்கு எப்பவும் குறை இருக்காது.
சாணக்கிய நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது நிதி சாஸ்திரம் மூலம் சமூகத்திற்கு பல முக்கியமான விடயங்களை நமக்கு கூறி உள்ளார். சாணக்கிய நிதியின் போதனைகள் இன்றும் மக்கள் பின்பற்றி நடக்கின்றனர்.
அந்த வகையில் சாணக்கியர் நிதி சாஸ்திரத்தில் பணத்தை முதலீடு செய்வது குறித்து கூறி உள்ளார். அதன்படி இன்று நிதி சாஸ்திரத்தில் எங்கு பணத்தை தானம் செய்வது மங்களகரமானது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இது உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும். இந்த இடங்களில் பணத்தை தானம் செய்வது நிதி நன்மைகளை மட்டுமல்ல, சமூகத்தில் மரியாதையையும் தருகிறது என கூறப்படுகின்றது.

குழந்தைகளின் கல்வி
- சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வது நல்லது எனப்படுகின்றது.
- உங்கள் சொந்த குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் பணத்தை முதலீடு செய்வது இதற்கு அர்தம் இல்லை. சாணக்கிய கூற்றுப்படி சமூகத்தில் நிதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் கல்வியில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்மை தரும்.
- நல்ல கல்வியைப் பெறுவதன் மூலம், குழந்தைகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறார்கள். இதனால் முதலிடு செய்த நமக்கும் செல்வம் குறையாது.
சமூக சேவை
- உங்கள் பணத்தை சமூக சேவைக்காகப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மன அமைதியை பெறலாம். சமூக சேவையில் முதலீடு செய்யப்படும் பணம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும்.
- எனவே, ஆச்சார்ய சாணக்கியர் உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சமூக சேவைக்காக அர்ப்பணிக்க பரிந்துரைக்கிறார்.

ஆதரவற்ற மக்களுக்கு
- உங்கள் பணத்தை ஏழைகள் அல்லது நிதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கொடுத்தால் நன்மை தருமாம். சாணக்கிய நிதி இதை ஒரு நல்ல செயலாகக் கூறப்பட்டுள்ளது.
- மேலும் இது மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமானது. ஏழைகளுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
- ஒரு நல்ல செயலைச் செய்கிறீர்கள். உங்கள் நல்ல செயல்கள் இறுதியில் உங்களுக்கு பயனளிக்கும்.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுதல்
- சாணக்கிய நிதியின்படி, ஒரு நோய்வாய்ப்பட்ட நபருக்கு பணம் தேவைப்பட்டால், உங்களிடம் போதுமான அளவு இருந்தால், நீங்கள் அவர்களுக்கு உதவ ஒருபோதும் தயங்கக்கூடாது.
- ஒரு நோய்வாய்ப்பட்ட நபரிடம் நீங்கள் காட்டும் கருணை உங்களுக்கு மன திருப்தியைத் தரும். மேலும் அந்த நபர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் உங்களுக்கு உதவலாம்.
- ஒரு நோய்வாய்ப்பட்ட நபருக்கு உதவுவது உங்களுக்கு மரியாதையையும், கடவுளின் ஆசீர்வாதத்துடன், செல்வத்தையும் தருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).