Chanakya Niti: இந்த 3 விடயங்களும் ஒரு மனிதனை பூமியில் சொர்க்கமாக வாழ வைக்கும்
Chanakya
By Pavi
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நிதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நிதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் உங்களை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும். பூமியில் இந்த மூன்று விஷயங்களைப் பெறுபவர் வாழும் போது பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்.
கீழ்படிதல் கொண்ட மகன் | கீழ்படிதல் கொண்ட மகன்களைப் பெற்ற பெற்றோர்கள் பூமியிலேயே சொர்க்கத்தை போல் வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். பெற்றோர்களின் பேச்சை கேட்டு அவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் மகன்களைப் பெற்ற பெற்றோருக்கு இந்த பூமி சொர்க்கம் போன்றது என்று அவர் கூறுகிறார். பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அத்தகைய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வயதான காலத்தில் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆதரிக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் போன்றது என்று சாணக்கியர் தெளிவுபடுத்துகிறார். |
ஒருவரையொருவர் மதிக்கும் கணவன் மனைவி | தனது வார்த்தையைக் கேட்டு தனது விருப்பப்படி நடந்து கொள்ளும் மனைவியைக் கொண்ட ஒரு மனிதன் இந்த பூமியில் சொர்க்கம் போல வாழ்வதாக சாணக்கியர் கூறுகிறார். இது மனைவிக்கு மட்டுமல்ல, கணவனுக்கும் பொருந்தும். ஒரு மனிதன் தனது மனைவியின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். வீட்டில் அமைதி நிலவும். குடும்பத்தில் அன்பும், பரஸ்பரம் மரியாதை இருந்தால் அது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். |
திருப்திக்கு போதுமான செல்வம் | சாணக்கியர் கூற்றுப்படி தேவைக்கு பொருள் சேர்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிக செல்வம் இருப்பவர்கள் மன நிம்மதியை இழந்து தவிப்பார்கள். எனவே தேவையான அளவு செல்வம் சேர்ப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ப வாழப்பழகி இருப்பார்கள். இதுதான் உண்மையான செல்வம், அத்தகையவர்களுக்கு பூமி கூட சொர்கமாக மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US