உரிமையாளருக்கு உயிர் பயத்தை காட்டிய பூனை... செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கே கவனம்
பூனை ஒன்று தனது எஜமானரை விரட்டி விரட்டி தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்றாக பூனை காணப்படுகின்றது. இவ்வாறான செல்லப்பிராணிகள் தனது உரிமையாளருக்கு, அவரது குழந்தைகளுக்கு இரண்டாவது தாயாக செயல்படுவதை பல காணொளியில் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நபர் ஒருவர் வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றியுள்ளார். அத்தருணத்தில் காலை சுற்றி வந்த பூனை திடீரென கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
உடனே முதலாளியின் காலை கடிக்க வந்ததுடன், அவரை விரட்டி விரட்டி தாக்கவும் செய்கின்றது. பூனையிடமிருந்து தப்பிக்க உரிமையாளர் கடுமையாக போராடியுள்ளார்.
செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.
Cat owner suddenly gets attacked by his cat unprovoked and for no reason ? pic.twitter.com/bE4DhOIHol
— Crazy Clips (@crazyclipsonly) July 10, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |