பொலிஸாரிடம் கைவரிசையை காட்டி கைதான பூனை- பிணையில் விடுதலையாம்.. நடந்தது என்ன?
தாய்லாந்தில் பொலிஸாரிடம் கைவரிசை காட்டிய பூனை, கைது செய்யப்பட்ட சம்பவம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி கைது
தாய்லாந்து- பேங்காக் நகரத்தில் ஒருவர், ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை “நுப் டாங்” என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், இந்த பூனை காணாமல் போனதும் உரிமையாளர் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
காணாமல் போன நுப் டாங் பூனை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பூங்கா ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பார்க்கவே அழகாக இருக்கும் அந்த பூனை ஆதரவின்றி இருந்ததை கண்ட அப்பகுதி பொலிஸார் அதை தூக்க சென்றபோது அவர்களை நகத்தால் தாக்கியுள்ளது. இதனால் நுப் டாங் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிணையில் விடுதலை
கைதியாக பூனை இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
க்யூட்டான நுப் டாங்கை பார்த்த சிலர் அதன் உரிமையாளர் வராவிட்டாலும் தாங்களே அதை தத்தெடுத்துக் கொள்வதாக கேட்டுள்ளனர். இதனை பொலிஸார் மறுத்து உரிமையாளரை தேடி வந்துள்ளனர்.
இப்படியொரு சமயத்தில் நுப் டாங்கை பொலிஸாரால் கைது செய்த விடயத்தை அறிந்த உரிமையாளர், பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொழுது பொலிஸார், அவரிடமும் பூனையிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு பிணையில் விடுதலைச் செய்துள்ளனர்.
இந்த செய்தி இணையவாசிகளிடையே அதிர்ச்சியையும் வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன்,“இது என்னடா பூனைக்கு வந்த சோதனை..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |