இலங்கை தமிழருக்கு கனடா லொட்டரியில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் அவர் கூறியது என்ன?
கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்தது. தடுப்பூசிக்கு பின் பல நாடுகளில் வெளிநாட்டவர்களை அனுமதி அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து, கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்து வந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தில் அவரை ஆழ்த்தி இருக்கிறது.
கனடாவின் Barrie நகரில் வசிந்து வருபவர் பிரதீபன் சிவராசா (42) இலங்கை சேர்ந்த நபரான இவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. அவருக்கு Lotto Max லொட்டரியில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பிரதீபன் தெரிவிக்கையில், கொரோனாவால் எனது ஊழியர்கள் வருமானத்தை இழப்பதை நான் விரும்பவில்லை, அதனால் எனது சொந்த செலவில் அவர்களுக்கு நிதியுவதி அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது லொட்டரியில் விழுந்த பணத்தை எனது வியாரத்தில் முதலீடு செய்யவதாக தெரிவித்துள்ளார். லொட்டரியில் விழுந்த 9 கோடி என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார்.