நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஒட்டகப்பால்- ஆராய்ச்சியாளர்களின் தகவல்!
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான நுண்ணூட்டச்சத்துக்களும், வைட்டமின் C, பி1, பி2 ஆகியவையும் அதிக அளவில் அடங்கியுள்ளது.
மேலும், ஒட்டகப்பால் மூளை வளர்ச்சியின்மை, பரம்பரை நோயை குணப்படுத்தும், உடல் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கும், எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதயத்தில் கொழுப்பை படியவிடாது. மாரடைப்பை தடுக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கும். தோல் ஒவ்வாமை நோய்களை தடுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்த ஆய்வில், ஒட்டகப்பால் அருந்துவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற பால் வகைகளை விட குறைந்த அளவு சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு சத்து உள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.