புல்டோசரில் திருமணம் ஊர்வலமாக வந்த தம்பதிகள் - வாயடைத்துபோன உறவினர்கள்
திருமணத்துக்கு மணமகன் ஒருவர் புல்டோசரில் சவாரி செய்து வந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமகன் புல்டோசரில் அமர்ந்து கொண்டு ஊர்வலமாக திருமணத்திற்கு வந்த சம்பவம் வைரல் ஆகி உள்ளது.
மணமகளான அங்குஷ் என்ற பொறியாளருக்கும், சுவாதி மால்வியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதுதொடர்பாக மணமகன் அங்குஷ் கூறியதாவது, நான் புல்டோசரில் எனது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவு.
இதுகுறித்து எனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினேன். அவர்களும் எனது ஆசையை நிறைவேற்றி விட்டனர்.
மேலும், புல்டோசரில் ஊர்வலம் நடந்ததால் என் திருமணம் மறக்க முடியாததாக மாறியிருக்கிறது எனக்கூறியுள்ளார்.