பல் துலக்கியும் வாய் துர்நாற்றமா? இந்த இரண்டு பொருட்களை கொண்டு சுத்தம் செய்ங்க
இன்றைய காலத்தில், எல்லா வயதினரையும் பாதிக்கும் பொதுவான சுகாதார பிரச்சனையாக வாய் துர்நாற்றம் (bad breath) மாறியுள்ளது. இந்த பிரச்சனை, பிறரிடம் பேசத் தயக்கத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் குறைக்கும் நிலையை உருவாக்குகிறது.
இதை சமாளிக்க, உணவு பழக்கங்கள் மற்றும் நன்றான வாய்ச் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, தினசரி கிராம்பு மற்றும் துளசி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்
வறண்ட வாய் வாயில் உமிழ்நீர் குறைவாக இருக்கும் போது, பாக்டீரியாக்கள் அதிகமாக வளரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தவறான உணவுப் பழக்கம் வெங்காயம், பூண்டு, காரமான உணவுகள், மது, மற்றும் சிகரெட் போன்று சில உணவுப் பழக்கங்கள் வாய் துர்நாற்றத்தை தூண்டக்கூடும்.
வயிற்றுப் பிரச்சனைகள் அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவை கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாகும்.
பல் மற்றும் ஈறு பிரச்சனைகள் பற்களில் உள்ள துவாரங்கள், பியோரியா (பல் ஈறுத் தொற்று), ஈறுகளில் வீக்கம், தொற்று ஆகியவையும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். இதற்கு கிராம்பு மற்றும் துளசி நிவாரணம் தரும். இதை நாம் முறைப்படி உபயோகிப்பது அவசியம்.
2 முதல் 3 முழு கிராம்புகளையும் மெதுவாக மென்று, அவற்றின் சாற்றை வாய் முழுவதும் பரப்பவும். நீங்கள் கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
தண்ணீரில் 1-2 சொட்டு கிராம்பு எண்ணெயைச் சேர்த்து, அதை மவுத்வாஷாகப் பயன்படுத்துவதும் வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |