காதலி கண்முன்னே அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலன்... 5 வருட காதலுக்கு ஏற்பட்ட சோகம்
தமிழகத்தில் காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா(21). கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் நத்தம் - மதுரை சாலையில் உள்ள மூங்கில்பட்டி முல்லை நகரை சேர்ந்த ராசு என்பவருன் மகள் பரமேஸ்வரியை(20) கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை காதலனிடம் தெரிவித்த நிலையில், வீட்டிற்கும் வரவழைத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த தருணத்தில், காதலி இவ்வாறு கூறியதால் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையறிந்த பரமேஸ்வரியின் பெற்றோர், மற்றும் அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள், பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்பொழுது ஆத்திரத்தில் பரமேஸ்வரியின் சகோதரன் மலைச்சாமி அருகில் இருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவைத் தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாரதியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போது, செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் பொலிசார் பாரதிராஜாவின் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்ததோடு, காதலியின் வீட்டாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
