தொப்புள் கொடி அகற்றாமல் குப்பைத்தொட்டியில் சடலமாக ஆண்குழந்தை
குப்பை தொட்டியில் பிணமாக கிடந்த ஆண் குழந்தையின் உடலை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே இயங்கிவரும் அரசு மருத்துவமனை அருகே குப்பை தொட்டி ஒன்று உள்ளது.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில், மருத்துவமனைக்கு வந்த சிலர் குப்பை போடுவதற்கு குப்பை தொட்டியை அவதானித்த போது அதனுள் பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ஆம், இரத்தக்கறையுடன் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் ஆண் குழந்தை ஒன்றின் சடலம் துணிப்பையில் சுற்றப்பட்டவாறு அங்கு கிடப்பதை பார்த்துள்ளனர்.
உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தை பிறந்து சில நிமிடங்களில் இங்கு போடப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிசார், குழந்தையை இவ்வாறு வீசி சென்றது யார்? காரணம் என்ன என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.