நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யும் மொபைல் தொலைந்துவிட்டதா? முதலில் இதை செய்திடுங்க! பணம் பாதுகாப்பா இருக்கும்
நமது அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் முக்கிய பங்காக ஆகிவிட்டது. பணப்பரிவர்த்தனைகள் முதல் பல விஷயங்களுக்கு மொபைல் போன் மிகவும் அத்தியாவசியமாகிறது.
இந்தச் சூழலில் நம்முடைய மொபைல் போன் திருடி போகிவிட்டால் நம்முடைய முக்கியமான UPI விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும்.
திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து UPI விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் பல ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக நாட்டில் மொபைல் போன் திருட்டு போனால் பெரியளவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மொபைல் போன் திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியவை என்னென்ன?
வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும்.
உங்கள் மொபைல் போனில் கூகுள் பே மற்றும் பேடிஎம் பயன்படுத்தி இருந்தால் அதன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அந்த கணக்குகளை முடக்க வேண்டும். இதன் மூலம் இந்த செயலிகளிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்க முடியும்.
Phone Pe பயனாளர்கள் 08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணை அழைக்க வேண்டும், மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு OTP உங்களிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் OTP பெறாத விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு தொலைந்த சிம் அல்லது சாதனத்தின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பில் பேசுவீர்கள், அவருக்கு முழுமையான தகவலைக் கொடுத்து அந்த கணக்குகளை முடக்க வேண்டும்.