தமிழர்கள் விரும்பி உண்ணும் கருப்பு உளுந்து தேன் அடை
கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்தில் அடை செய்து அதை தேனில் ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 250 கிராம்
- தோல் உளுந்து - 50 கிராம்
- உப்பு - 1 டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - 100 கிராம்
- நெய் - தேவையான அளவு
- தேன் - தேவையான அளவு
செய்முறை
நன்கு ஊறிய அரிசி மற்றும் கருப்பு உளுந்தைப் பிறு பிறுவென அரைக்கவும். கூடவே தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும்.
அதிக உப்பு சேர்க்காமல் சுமார் 1 டீஸ்பூன் உப்பை அரைத்த மாவில் சேர்த்து கலக்கவும். மாவைப்புளிக்க விடக் கூடாது. அடைச்சுடும் கல்லை அடுப்பின் மேல் வைத்துச் சூடுச் செய்யவும். கரைத்த மாலைக் கல் மேல் ஊற்றி போதுமான நெய்யைச் சேர்த்து அடையை மொது மொது வெனச் சுட்டு அதன் சுவைக்கு ஏற்பக் தேனைச் சேர்க்கவும். தேனுடன் அடை ஊறிய பின்பு சுவைக்கவும்.
குறிப்பு
அடையை மூடி வைத்து சுட்டால் சுவை இன்னும் கூடுதலாம்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடையைச் சுடவும்
களி மண்ணால் செய்த கெட்டியான தட்டையானச் சிறு குழியுடன் இருந்த கல்லை அடைச் சுட பயன்படுத்தியுள்ளனர்.