ஒரே நாளில் அமெரிக்க சந்தையில் அசுர வளர்ச்சியை எட்டிய பிட்காயின் மதிப்பு
உலக அளவில் பிட்காயின் மதிப்பானது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஒரே நாளில் 4000 டாலர் அதிகரித்து கடந்த ஆறு மாதத்தில் முதல் முறையாக 60,000 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் பிட்காயின் மீதான ETF அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்புதல் பெற விண்ணப்பங்களை SEC அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, ப்ளூம்பெர்க் பிட்காயின் மீதான ETF திட்டத்தை அறிமுகம் செய்ய SEC அமைப்பு அனுமதி அளிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. மேலும், அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC இதை அனுமதித்தால் முதல் முறையாக பிட்காயின் அடிப்படையான ETF ஆக இது இருக்கும்.
இது முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கதத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் பிட்காயின் மதிப்பை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். ஒரு நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 56,000 டாலர் அளவீட்டில் இருந்து 59,961 டாலர வரையில் உயர் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.2 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.