தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம்! வித்தியாசமான பிரியாணி கடையின் ஆஃபர்!
கடந்த சில நாட்களாகவே தொடர் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக காய்கறிகள் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. '
இதனிடையே, தக்காளியின் விலை கடும் உயர்வால் அன்றாட மக்கள் திணறி வருகின்றனர். சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ,160 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையைக் காரணமாகக் கூறி வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடை பொதுமக்களைக் கவரும் வகையில் அட்டகாசமான ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளது.
அதில், முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ தக்காளி கொடுத்தாள் ஒரு பிரியாணி இலவசம் என்றும் அக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த ஆப்பர் இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கும் என்றும் கூறியிருக்கிறது,. மேலும், இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.