வீட்டில் பறவைகள் கூடுகட்டினால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் பகீர் உண்மை
ஜோதிட ரீதியில் நம் வாழ்வில் மற்றும் வீட்டில் நடக்கும் சில சம்பவங்களுக்கு பின்னே நல்லது கெட்டது என சில பலன்கள் இருக்கும். அந்த வகையில் பறவைகள், தேனீ, குளவி வீட்டில் கூடுகட்டுவதை நாம் அவதானித்திருப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில், விலங்குகள், பறவைகள், மற்றும் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைவதற்கும் அல்லது விசித்திரமான நடத்தைகள் செய்வதற்கும் மங்களகரமான மற்றும் அசுப பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் எந்தப் பறவை கூடு கட்டினால் மங்களம் உண்டாகி அதிர்ஷ்டம் என தற்போது பார்க்கலாம்.
வெளவால்: வீட்டிற்குள் வௌவால் இருந்தால், ஆபத்தின் அறிகுறியாகவும், மோசமான நிகழ்வுகளின் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது. ஆகையால் வௌவாலுக்கு தீங்கு விளைவிக்காமல் உடனே வெளியேற்ற வேண்டும்.
தேனீ: வீட்டில் தேனீ கூடு கட்டினால் பெரும் விபத்து ஏற்படும்.
குளவி: வீட்டில் குளவி கூடி கட்டினால் அசுபமாக கருதப்படுவதுடன் உடனே அகற்றிவிட வேண்டும்.
பறவைக் கூடு: பறவைகள் கூடு கட்டினால் மிகவும் மங்களகரமானது மட்டுமின்றி, இவ்வாறு கூடு கட்டப்படும் வீடு மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்கின்றது.
புறா: லட்சுமி தேவியாக கருதப்படும் புறா வீட்டில் கூடுகட்டினால் மகிழ்ச்சியும், அமைதியும் கரைபுரண்டு ஓடுமாம்.