பிக்பாஸில் அப்பாவியாக இருக்கும் தாமரை செல்வியா இது? குத்தாட்டத்தை பாருங்க! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கும் தாமரைச் செல்வியின் காணொளி ஒன்று வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக சென்ற தாமரைச் செல்வி மிகவும் அமைதியாக இருந்து வருவதுடன், சிறிய விடயத்திற்கு கூட கண்கலங்கி விடுகின்றனர்.
சமீபத்தில் இவருக்கு பாவனி மேக்கப் எல்லாம் போட்டு இவரை அழகுபடுத்தினார். அப்பொழுது Eyebrow பென்சில் என்றால் கூட என்னவென்று தெரியாது என்று கூறியிருந்தார்.
மேலும் இன்றைய ப்ரொமோ காட்சியிலும் தான் கடந்து வந்த பாதையினை கண்ணீரோடு கூறி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் கண்ணீர் வடிக்க வைத்தார்.
இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றாரே என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், தற்போது அவர் வள்ளி திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய காட்சி அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம் குறித்த காட்சி பயங்கர மேக்கப்புடன், மாடர்ன் உடையுடன் நடனமாடியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டு இவர் விஷபாட்டில் என்று கூறிவருகின்றனர்.