டைட்டில் ஜெயிச்ச ராஜூவுக்கு இவ்வளவுதான் சம்பளமா? ஷாக்கில் ரசிகர்கள்! அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் வெற்றி பெற்ற ராஜூவின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்றுடன் முடிய உள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.
ராஜூவுக்கு ஒரு வாரத்துக்கு ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.