பாத்டப்பில் இலங்கை பெண் மதுமிதா வெளியிட்ட புகைப்படம்: வைரலாக்கி வரும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய போட்டியாளரான மதுமிதா பாத்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பெண்ணான இவர் மாடலிங் துறையிலும், பேஷன் டிசைனிலும் கலக்கி வந்தவர். இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மதுமிதா, சக போட்டியாளரான சுருதியுடன் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
என்னுடைய மொழி பிரச்னையால் என்னால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரிடமும் பேசி புரிய வைக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த நிலையில் அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுமிதா பாத்டப்பில் படுத்து ஹாட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி தொடங்கியுள்ள நிலையில், இனி மதுமிதாவும் போட்டோஷூட்டில் பிசியாகி விடுவார் என அனைவரும் பேசி வருகின்றனர்.