தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்... பிக்பாஸ் வீட்டிற்குள் உறுதியாக செல்லும் 9 பேர் யார் யார்னு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதம் 3ம் திகதி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்ற 9 பேரின் தகவல் லீக் ஆகியுள்ளது.
பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரபலங்கள் செல்கின்றனர் என யூகங்கள் அடிப்படையில் பிரபலங்களின் பெயர்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து, பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சம்யுக்தாவின் தோழி ப்ரதாயினி ஆகியோர் பிக்பாஸ் லிஸ்டில் இடம்பெற்றாலும் பின்னர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
தற்போது அனைத்து போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகவில்லை என்றாலும் இதில் உறுதியாக கலந்து கொள்ளும் 9 பேர் யார் யார் என்பது வெளியே கசிந்துள்ளது.
இதில் அனைவரும் எதிர்பார்க்கும் தொகுப்பாளினி பிரியங்கா,, யாரும் எதிர்பாராத நடிகையான பிரியாமணி, ஜெமினிகணேசன் அவர்களின் பேரன் அபிநய், மேலும் பிரபல ரிவியில் சின்னத்தம்பி சீரியலில் நடித்த நடிகை பவானி ரெட்டி, நடிகர் நிழல்கள் ரவி, பிரபல நடிகை ஷகிலாவின் மகளான மிளா, நடிகை பிரியங்கா, நடிகை யாஷிகாவின் ஆண் நண்பரும் மாடலுமான நிரூப் நந்தகுமார், மாடலிங் துறையில் கலக்கி வரும் அக்ஷரா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.