காதல் கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 2ன் மூலம் கலந்துகொண்டவர் தான் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர், ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிவந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான அஞ்சானை திருமணம் செய்து கொண்டார் வைஷ்ணவி. சுமார் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
விவாகரத்து பதிவு
இதுகுறித்து வைஷ்ணவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது, 6 வருடங்களாக ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்.
ஆனால், நாங்கள் இருவரும் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்களாகவே இருக்க, நீண்ட ஆலோசனைக்கு பிறகு பிரிவதே சிறந்தது என முடிவு செய்துள்ளோம். எங்களிடம் நிறைய பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஆகிவிட்டது.
என்ன நடந்துவிட்டது என்று யூகிக்கும் அனைவருக்கும் எங்களுக்குள் எதுவும் மோசமாக நடக்கவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.
மேலும், தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள். ஏனென்றால், நாங்கள் பிரிந்ததற்கு வருந்தவில்லை. அஞ்சானும், நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம்.
பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற முடிவை யோசித்து எடுத்தோம். அதுவே எங்களுக்கு சிறந்தது. நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது என பதிவிட்டுள்ளார்.
After 6+ years together, @a_flyguy and I have decided to part ways. I still love him just as much but after much deliberation we both have decided that it is best we both do what allows us to be ourselves without the pressure of a relationship pic.twitter.com/ihQMzft8P1
— Valia (@Vaishnavioffl) August 14, 2022