கடன் தொல்லையால் தற்கொலை வரை சென்ற தாமரை: 12 லட்சத்தை எடுக்காததற்கு கூறிய காரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தாமரை தான் குறித்த 12 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறாததற்கு காரணத்தினை கூறியுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக தாமரையின் சிறு சிறு அசைவுகளைக் கூட ரசிகர்கள் பிரபலமாக்கி வருகின்றனர்.
மேலும் தாமரை வெறுங்கையோடு வெளியேறாமல் அந்த பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தால் ரசிகர்கள் இன்னும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தாமரையை நினைத்து அவரது குடும்பம் கண்ணீரில் மூழ்கியுள்ளது.
கடந்த வருடம் கொரோனா காலத்தில் தாமரை கடன் தொல்லை தாங்கமுடியாமல் கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்பு குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு கையில் 8 தையல் போட்டும் அதற்கான வைத்திய செலவும் கடன் வாங்கியே பார்த்துள்ளார் என்ற உண்மை குடும்பத்தினர் மூலம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சிபி எவ்வளவோ கேட்டும் பணத்தினை எடுத்துக்கொள்ளாத தாமரை அதற்கான காரணத்தினைக் கூறியுள்ளார்.
தான் 12 லட்சம் பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் தான் சார்ந்த நாடக துறைக்காக தான் இந்த போட்டியில் தொடர நினைத்ததாகவும், 12 லட்சத்தை எடுத்திருந்தால் அது தனிப்பட்டு தனக்காக விளையாடியது போல் ஆகிவிடும்.
மேலும் என்னை நம்பி, எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தை தரும் என்று தனது பதிலைக் கூறி விளக்கம் அளித்துள்ளார்.