இறுதிகட்டத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சான்ட்ரா! வாயடைத்துப்போன பிக்பாஸ் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9 இல் இறுதிசுற்றுக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் 5 பேர் இல்லை 4 பேர் தான் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சான்ட்ரா இன்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டிவருகின்றது.

கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 18 லட்சத்துடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பிக்பாஸ் சீசன் 9 இல் இறுதிசுற்றுக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் 5 பேர் இல்லை 4 பேர் தான் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சான்ட்ரா இன்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த காட்சியடங்கிய promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |