பவித்ராவின் தியாகம்.. உடனே பாராட்டி பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பு- ஏகமனதாக முடிவெடுத்த Housemates
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களை தெரிவு செய்து பிக்பாஸ் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.
இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற டோல் டாஸ்கில் ஜெஃப்ரி வெற்றி பெற்றார்.
பவித்ராவின் தியாகத்தால் மனம் இறங்கிய பிக்பாஸ்
இந்த நிலையில், இந்த வாரம் Angels vs Devils டாஸ்கில் போட்டியாளர்கள் அணைவரும் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில், தீபக், ரஞ்சித், மஞ்சரி மற்றும் பவித்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர்.
ரஞ்சித், அன்ஷிதா, சத்யா, ஆனந்தி, விஷால், பவித்ரா, ராயன், ஜெஃப்ரி, மஞ்சரி, ஜாக்குலின், முத்துராமன், தீபக், சௌந்தர்யா, சாச்சனா, அருண், தர்ஷிகா, ராணவ் என மொத்தமாக 17 போட்டியாளர்களில் அடுத்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் இந்த 4 போட்டியாளர்கள் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என பிக்பாஸ் கூறியுள்ளார்.
பவித்ரா செய்த தியாகம் பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது. இதனால் இந்த வாரம் வொர்ட்டிங்கில் இவர் தான் முதல் இடத்தில் இருப்பார் என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |