சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு.. ஸ்டாரை பிடுங்கி வீசிய ரஞ்சித்- சூசகமாக விளையாடும் ஜாக்குலின்
ரஞ்சித்திடம் ஸ்டாரை கொடுத்து விட்டு ஜாக்குலின் நாடகமாடி மீண்டும் அந்த ஸ்டாரை திரும்ப வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரையில், நடந்த எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது. இதற்கு போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் ஊழியர்களும் தான் என தகவல்கள் கூறுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.
அவர்களை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளே வேலைப்பார்க்கின்றனர்.
சூடுபிடிக்கும் பிக்பாஸ் களம்
இந்த நிலையில், இன்றைய தினம் பேய்கள் மற்றும் ஏஞ்சல்கள் டாஸ்க் சென்றுக் கொண்டிருக்கின்றது. அதில் நேற்றைய தினம் பேய்களாக இருந்த போட்டியாளர்கள் இன்றைய தினம் ஏஞ்சல்களாகவும், நேற்று ஏஞ்சல்களாக இருந்தவர்கள் இன்று பேய்களாகவும் மாறியுள்ளனர்.
இதில் நேற்றைய தினம் பேயாக பல கொடுமைகளை செய்த ஜாக்குலினை இன்றைய தினம் ரஞ்சித் காயப்படுத்தியுள்ளார். இதனால் தன்னிடம் உள்ள ஸ்டாரை ஜாக்குலின் தூக்கி எறிந்தார்.
பின்னர், இதுகுறித்து வீட்டிலுள்ள அனைவரிடம் போய் கூறுகிறார். அத்துடன், “ உங்களை நான் என்னுடைய அப்பா போன்று நினைத்தேன். நீங்கள் இப்படி நடந்து கொள்வது கஷ்டமாகவுள்ளது..” 60 நாட்களும் இப்படி தான் விளையாடுகிறீர்கள்..” என பேசுகிறார்.
இதனை தொடர்ந்து மனம் உடைந்து போன ரஞ்சித் தன்னிடம் இருந்த ஸ்டாரை தூக்கி எறிந்து விட்டு, டாஸ்க் செய்யாமல் கவலையுடன் செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |