மக்கள் ஆதரவை பெற்ற வைல்ட் கார்ட் என்றி.. வி.ஜே பார்வதிக்கு ஆப்பு தானா?
மக்கள் ஆதரவை அதிகம் பெற்ற பாக்கிலட்சுமி சீரியல் நடிகை பிக்பாஸ் சீசன் 9-ன் முதல் வைல்ட் கார்ட் என்றி கொடுக்கவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார். ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.
இதனை தொடர்ந்து கம்ருதீன்- பார்வதி இருவருக்கும் சிறைக்கு தவறாக பேசிக் கொண்ட காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் வைல்ட் கார்ட் என்றி
இந்த நிலையில், திவாகரனிடம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, “கம்ருதீன் எல்லை மீறிகிறான். அவனுக்கு என்று ஒரு எல்லை உள்ளது. அதனை மீறி நடந்தால் எனக்கு பிடிக்காது. அவனுக்கு நா ஊறுகாய் இல்லை.. கம்ருதீன் என்னுடைய தோழன்..” என கூறுகிறார்.
இப்படியொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 9 ப்ரோமோவில் அடிக்கடி வரும் வி. ஜே பார்வதிக்கு போட்டியாக பிக்பாஸ் வீட்டில் யாரும் இல்லை. மற்ற போட்டியாளர்களை இலிவாக பேசுவது, டாஸ்க்கில் விதி மீறுதல், மரியாதை இன்மை போன்ற தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டை ஆள பாக்கியலட்சுமி சீரியல் திவ்யா கணேஷ் உள்ளே வருகிறார். தன்னுடைய நேர்மையான குணத்தை வெளியில் காட்டப்போவதாக அவர் கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வி.ஜே அர்ச்சனா போன்று வைல்ட் கார்ட் என்றியில் உள்ளே சென்று மாஸ் காட்டப் போகிறார் என சின்னத்திரை ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |